வாஷிங்டன்: அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடை மேலும் நீட்டிக்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்து உள்ளார்.
“வெளிநாட்டு பயங்கரவாதிகள்” மற்றும் பிற பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கை தேவை என்று கூறி, 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்யும் ஒரு பிரகடனத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கையெழுத்திட்டார்.

எங்களுக்கு தீங்கு விளைவிக்க விரும்பும் மக்களை எங்கள் நாட்டிற்குள் நுழைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று அதிபர் டிரம்ப் தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பட்டியல் திருத்தப்படலாம் அல்லது புதிய நாடுகளைச் சேர்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பு ஜூன் 9, 2025 முதல் அமலுக்கு வருகிறது. அந்த தேதிக்கு முன் வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்படாதாக டிரப் தெரிவித்தார்.
தற்போதைய அதிபராக உள்ள டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில், ஏழு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அமெரிக்காவுக்கு வர தடை அறிவித்தார், இது 2018 இல் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்படது. ஆனால், அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த பைடன் தலைமையிலான ஜனநாயகக் கட்சி ஆட்சி, 2021-ல் டிரம்ப் விதித்த தடையை ரத்து செய்தது. இது விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மீண்டுமை ஆட்சிக்கு வந்ததும் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிப்பவர்களை பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் கண்காணித்து பரிசோதிக்க முடியாத எந்த நாட்டிலிருந்தும் நாங்கள் திறந்த இடம்பெயர்வை அனுமதிக்க முடியாது, என்று டிரம்ப் கூறினார்.
அதாவது, “பெரிய அளவிலான பயங்கரவாதிகளின் இருப்பை” நிலைநிறுத்துவதில் சில நாடுகள் உறுதியாக உள்ளன, அந்நாடுகள் விசா பாதுகாப்பில் ஒத்துழைக்கத் தவறி விட்டன என்று கூறியதுடன், அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிப்பவர்களை பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் கண்காணித்து பரிசோதிக்க முடியாத எந்த நாட்டிலிருந்தும் நாங்கள் திறந்த இடம்பெயர்வை அனுமதிக்க முடியாது, என்று டிரம்ப் கூறினார்.
இதனால், தேச பாதுகாப்பு கருதி 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, ஆப்கானிஸ்தான், சாட், காங்கோ, எக்குவடோரியல் கினியா, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், ஏமன், மியான்மர் , லிபியா, சோமாலியா, சூடான் உள்பட 12 நாட்டினருக்கு தடை விதித்துள்ளது.
புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த மக்களின் நுழைவுக்கு பகுதியளவு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு, இந்த ஆண்டு டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தின் தொடக்கத்தில் தொடங்கிய குடியேற்றத் தடையின் ஒரு பகுதியாகும், இதில் கும்பல் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் நூற்றுக்கணக்கான வெனிசுலா மக்களை எல் சால்வடாருக்கு நாடு கடத்துவதும், சில வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கையை மறுத்து மற்றவர்களை நாடு கடத்த முயற்சிப்பதும் அடங்கும்.