புதுக்கோட்டை: மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் கோட்டாட்சியர் மீது மினி லாரி ஏற்றி கொல்ல முயற்சி நடைபெற்றது. இந்த சம்பவம்  புதுக்கோட்டை மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. இது அரசு அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம்,  அன்னவாசல் அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கார் மீது மினிலாரியை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலுப்பூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகிறது . புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிம வளங்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.  இந்த கல்குவாரிகள் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் இதற்கு உடனடியாக இலுப்பூர் RDO  வருவாய் துறையினர் ஆதரவாக இருப்பதாகவும்,  மாதம் 25 லட்ச ரூபாய் குவாரி உரிமையாளர்களிடம் இருந்து வசூல் வேட்டை நடத்தி  வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

அதுபோல ஆளும் கட்சியினரால் மணல் கடத்தலும் அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால், அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர், வருவாய் துறையினர் தயங்கி வரகின்றனர். ஏற்கனவே   கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி  ஊழல் முறைகேடு செய்து கோடிக்கணக்கில் சொந்தது சேர்த்ததாக கூறப்பட்டது. அவர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி திமுக எம்பி ஆ.ராசா அவர்களின் நெருங்கிய உறவினர் என்று பேசப்படுகிறது.  இவர், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலராக வந்த பின்பு பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து வைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

இதையடுத்து, புதிதாக வந்த கலெக்டர் அவரை மாற்றி உத்தரவிட்டார் தற்போது  தெய்வநாயகி என்பவர்லபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வருவாய் கோட்டாச்சியராக பணியாற்றி வருகிறார்.  இவர் தனது  உதவியாளர் ராஜேந்திரன் மற்றும்  டிரைவர் கனகபாண்டியன் உடன் சம்பவத்தன்று,  அலுவலக பணியின் காரணமாக ஒரு காரில் பொன்னமரவாதி தாலுகா ஆலவயல் கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் இலுப்பூர் நோக்கி வந்துள்ளனர்.

காரை கனக பாண்டியன் ஓட்டி வந்த நிலையில்,  அருகே உள்ள ஆற்றில் மணல் கடத்தல் நடப்பதாக  அவருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அவர் உடனே,  இலுப்பூர் தாலுகா கிளிக்குடி வட்டம் பேயால் வருவாய் கிராமம் குடுமியான்மலை பகுதிச் சென்றார்.  அப்போது,  அவரது கார்  வளையப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே சென்றபோது அந்தவழியாக வந்த மினி லாரி ஒன்றை வருவாய் கோட்டாச்சியர் நிறுத்தி சோதனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது .

அப்போது அந்த வாகனத்தில் இருந்த இரண்டு நபர்கள் ஆர்டிஒவை கொலை செய்யும் நோக்கத்துடன் அவர்கள் சென்ற காரின் வலது பக்கமாக மோதியுள்ளனர். அதில் கார் சேதமடைந்தது பின்னர் மீண்டும் மினிலாரியை பின்நோக்கி எடுத்து காரின் மீது மோத வந்த போது காரை டிரைவர் கனக பாண்டியன் இடது பக்கமாக திருப்பியதால் ஆர்டிஒ உள்ளிட்ட 3 பேர் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

பின்னர் வாகனத்தை நிறுத்தி விட்டு வந்த மணல் கடத்தல் கும்பல்,  காரில் இருந்து வருவாய் கோட்டாட்சியர் உள்பட 3 பேரையும்,    வண்டியை ஏற்றியே கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டி அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததுடன், மினி லாரியை மீண்டும் பிடிக்க முயற்சித்தபோது, அதில் வந்தவர்கள், மினி லாரியை அங்கேயே விட்டுவிட்டு தலைமறைவாகினர்.

இதையடுத்து அந்த வாகனத்தை கைப்பற்றிய கோட்டாட்சியர், அதை ஆய்வு செய்தபோது,  அந்த வாகனத்தில் பதிவெண்கள் அழிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அந்த இடத்தில் இருந்தவர்களை விசாரித்தபோது, அந்த வாகனன் அந்த பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகருக்கு சொந்தமானது என்றும்,   அந்த வாகனத்தில் வந்தவரக்ள் கவிநாரிப்பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் சுந்தரம் என்றும் அந்த லாரி அவருக்கு சொந்தமானது என்றும் மற்றொருவர் மினிலாரி ஓட்டுனர் வீரையா மகன் சங்கர் என்றும் தெரியவந்தது.

வாகனத்தின் மீது மினிலாரியை வைத்து கொலை செய்யும் நோக்கத்துடன் மோதியும் கொலைமிரட்டல் விடுத்து அரசு பணியை செய்யவிடாமலும் மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு டிரைவர் கனகபாண்டியன் அன்னவாசல் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.