சென்னை

ன்று சென்னையில் நடந்த விசிக  மாவட்ட செயலாளர்கள் கூட்டட்த்ஹில் ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது/

இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைவர்  iதிருமாவளவன் தலைமையில் சென்னை அசோக்நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்/

அப்போது திருமாவளவன்,-

“ஆளுநரின் அதிகாரத்தை வரையறுத்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறோம்.  உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்துகிறோம்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் துணை வேந்தர்கள் கூட்டத்தை கூட்டியுள்ள ஆளுநர் மீதும், தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க. எம்.பி. ரிஷிகாந்த் துபே மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தாமே முன்வந்து உச்சநீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும்.’

என்று தெரிவித்துள்ளார்,