நெல்லை

னத்துறையினர் மணி முத்தாறு அருவி, மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தடை விதித்துள்ளனர்

தற்போது  தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இங்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு தேயிலைத் தோட்ட கிராமங்களான மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.

தற்போது வரை நாலு மூக்கு பகுதியில் 58 செமீ மழையும், ஊத்து பகுதியில் 50 செமீ, காக்காச்சி பகுதியில் 37.5 செமீ, மாஞ்சோலை பகுதியில் 18.7 செமீ மழையும் பதிவாகி உள்ளது. வழக்கமாக அப்பகுதிகளில் பெய்யும் மழையை விட  தற்போது அதிகமாக மழை பெய்து வருகிறது. இவ்வாறு தொடர் கனமழை காரணமாக இந்த மலை கிராமங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து தொடர்ந்த் அதிகமானதையடுத்து மணிமுத்தாறு அருவிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு சோதனை சாவடி வெறிச்சோடி  காணப்படுகிறது. வனத்துறை மறு உத்தரவு வறும் வரை சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. அதே வேளையில் விவசாயிகள் மணிமுத்தாறு அணை, பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.