சென்னை:
திருச்சியில் நாளை பாஜ சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது என மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிப்டுள்ள அறிக்கையில், ‘‘நீட் தொடர்பான திமுக உட்பட்ட எதிர்கட்சிகளின் எதிர்மறை அரசியலை எதிர்த்து நாளை (9ம் தேதி) மாலை 4 மணிக்கு தமிழக பாஜக சார்பில் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் பாஜக தொண்டர்களும், பொது மக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel