டெல்லி:  2023-24ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள்.    இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று கூறப்படுகிறது. அதன்பிறகு தாக்கல் செய்யும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

2023-24 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2024-25) வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை ஜூலை 31 ஆகும். வரி செலுத்துவோர் தாமதமாகத் தாக்கல் செய்வதைத் தவிர்க்க இந்தத் தேதிக்குள் தங்கள் வருமானத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். தற்போதைய நிலவரப்படி, ஜூலை 31 காலக்கெடுவைத் தாண்டி வருமான வரித்துறை எந்த காலக்கெடுவையும் அறிவிக்கவில்லை.

கடந்த மார்ச் மாதத்தோடு ஆண்டு இறுதிக் கணக்கு முடிவடைந்த நிலையில் 2023-2024 ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறை உத்தர விட்டிருந்தது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜூலை 31ம் தேதி காலக்கெடுவை நிர்ணயிப்பது வழக்கம். அதன்படி கடந்த வாரத்திலிருந்தே அதிகமான அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர்.

நாட்டில் வருமான வரி செலுத்துபவா்களில் 66 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்துள்ளதாக நேரடி வரிகள் வாரியத் தலைவா் ரவி அகா்வால் சமீபத்தில் தெரிவித்திருந்தார். கடந்த நிதி ஆண்டில் ஜூலை 25ம் தேதி சுமாா் 4 கோடி போ் வருமான வரி தாக்கல் செய்த நிலையில், அந்த எண்ணிக்கை ஜூலை 22ம் தேதி இரவே முறியடிக்கப்பட்டது

கடந்த நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் முடியும் வேலையில் சுமாா் 7.5 கோடி போ் தாக்கல் செய்தனா். இந்த நிலையில் இந்த நிதி ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது.

வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சமர்பிக்க தவறியவர்கள் அபராத்துடன் கூடிய ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதன்படி 31 டிசம்பர் 2024க்கு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனையும் கடந்து வருமான வரியை தாக்கல் செய்யவில்லை எனில் அது தானாகவே புதிய வரி விதிப்பு முறைக்கு மாற்றப்படும்.

ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரியைத் தாக்கல் செய்யத் தவறினால் வருமான வரிச் சட்டம் 234F பிரிவின்படி, தாமதமாகத் தாக்கல் செய்வதற்கான கட்டணம் ₹5000 விதிக்கப்படும்.

இதேபோல உங்கள் வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் , வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்வதற்கான கட்டணம் ரூ. 1,000 ஆகும். மேலும் கூடுதலாக, நிலுவையில் உள்ள வரித் தொகைக்கு மாதத்திற்கு 1% வட்டி விதிக்கப்படும்.

இதுதொடர்பாக மத்திய வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ‘வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, ‘ரீபண்டு’ பெறுவதற்காக தவறான தகவல்களைத் தெரிவிக்கக் கூடாது. தவறான தகவல் தருவது அல்லது தகவலை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்’ என, வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

வருமான வரித்துறை மற்றும் அதை நிர்வகிக்கும் மத்திய நேரடி வரி வாரியம் ஆகியவற்றின் தகவலின்படி, இதுவரை, ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும் இதில், மூன்றில் இரண்டு பங்கினர், புதிய நடைமுறையின்படி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வருமான வரி விதிகளின்படி, தற்போது, இரண்டு நடைமுறைகள் உள்ளன.

பழைய நடைமுறையின்படி, வரி அடுக்கு மற்றும் அதற்கான வரி விகிதம் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில், பல்வேறு வரிச் சலுகைகளைப் பெற முடியும்.

புதிய நடைமுறையின்படி, வரி அடுக்கு குறைவாக இருப்பதுடன், வரி விகிதமும் குறைவாக இருக்கும். அதே நேரத்தில், இதில் வரிச்சலுகை கோர முடியாது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், புதிய நடைமுறைக்கு பல புதிய சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது நடப்பு நிதியாண்டுக்கான கணக்கு தாக்கலில் நடைமுறைக்கு வரும். ‘ரிட்டர்ன்’ எனப்படும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு, ஜூலை, 31ம் தேதி கடைசி நாள். கடந்தாண்டில் எட்டு கோடிக்கும் மேற்பட்டோர் கணக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இதுவரை ஐந்து கோடிக்கும் அதிகமானோர் தாக்கல் செய்துள்ளனர். அடுத்த இரண்டு நாட்களில், மீதமுள்ளவர்கள் தாக்கல் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது