டெல்லி

நாளை டெல்லியில் இந்தியா கூட்டனி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர்,

வரும் 21 முதல் ஆகச்ட் 21 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடக்கிறது. இதில் ‘ரக்ஷா பந்தன்’ பண்டிகை மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஆகஸ்டு 12-ந் தேதி முதல் 18-ந் தேதிவரை நாடாளுமன்றத்துக்கு விடுமுறை விடப்படுகிறது. இதையொட்டி நாளை காங்கிரஸ், தி.மு.க. உள்பட 20-க்கு மேற்பட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனை கூட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் கூட்டத்தில் ராஷ்டிரீய ஜனதாதளம் பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளார்..

வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள்.  இந்த கூட்டத்தொடரில் பீகாரில் தேர்தல் கமிஷன் நடத்தி வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக பா.ஜனதாவுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடிக்கும் என்று தெரிகிறது.

மேலும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றியும், இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியது பற்றியும் மத்திய அரசிடம் காங்கிரஸ் கட்சி விளக்கம் கேட்கும் எனவும் பஹல்காம் தாக்குதல், காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து, பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள், ஆமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட பிரச்சினைகளையும் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்றும் தெரிகிறது.