சென்னை

மிழகத்தில்  இன்றைய (25/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 15,659 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 10,81,988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 13,557 பேர் உயிர் இழந்து 9,63,251 பேர் குணம் அடைந்து தற்போது 1,05,180 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 4,206 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 3,09,899 பேர் பாதிக்கப்பட்டு 4,567 பேர் உயிர் இழந்து 2,73,797 பேர் குணம் அடைந்து தற்போது 31,535 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 73,861 பேர் பாதிக்கப்பட்டு 911 பேர் உயிர் இழந்து 64,124 பேர் குணம் அடைந்து தற்போது 8,826 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 73,219 பேர் பாதிக்கப்பட்டு 714 பேர் உயிர் இழந்து 64,124 பேர் குணம் அடைந்து தற்போது 6,757 பேர் சிகிச்சையில் உள்ளனர்.