இன்று தை அமாவாசை – 31/01/2022 – சிறப்புப் பதிவு

மாதா மாதம் வரும் அமாவாசை தினம் மிகவும் முக்கியமானது ஆகும்.  குறிப்பாக  ஆடி – புரட்டாசி – தை மாதம் வரும் அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமானது.  ச்ய்ஜ்ச்ச்ப்ச்ய்ஜி ஆடி அமாவாசை அன்று பிதுருக்கள் பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்குக் கிளம்புவதாக ஐதீகம். மகாளய அமாவாசை என்று அழைக்கப்படும் புரட்டாசி அமாவாசை பிதுருக்கள் பூலோகம் வந்தடைந்து, மகாளய பட்ச காலத்தில் தங்கி இருந்து அருள் புரிவார்கள்.

தை அமாவாசை அன்று பித்ருக்கள் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி பிதுர் லோகம் திரும்புவதாக ஐதீகம்.  இந்த வருடம் தை அமாவாசை ஜனவரி 31 (தை 18) திங்கட்கிழமை அன்று வருகிறது. ஜனவரி 31ம் தேதி பிறபகல் 1.59 மணிக்கு அமாவாசை திதி தொடங்கி பிப்ரவரி 1ம் தேதி 12.02 வரை உள்ளது. அதனால் ஜனவரி 31ம் தேதி முழுவதும் முன்னோர்களுக்குத் திதி, தர்ப்பணம் கொடுக்கலாம்.

ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.    அவ்வாறு தர்ப்பணம் கொடுப்பவர்கள் நீர் நிலைகள், ஆறு, நதிக்கரைகளில் கொடுப்பது மிகவும் விசேஷமானது. மாதந்தோறும் அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்துச் செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும். இதை ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யலாம்.

இவ்வாறு  தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்குப் படைத்து விட்டு, சாப்பிடுவது, பசு மாட்டுக்குக் கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது உள்ளிட்டவை தர்ப்பணத்தில் அடங்கும்.