சென்னை

ன்று பராமரிப்பு பணிகளுக்காக சென்னை கடற்கரையில் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

மின்சார ரயில்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பொது போக்குவரத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளதால் நாள் தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்கின்றனர். அவ்வப்போது பராமரிப்பு பணிகளின் காரணமாக மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப் படுவது வழக்கம்.

இன்று கடற்கரை முதல் எழும்பூர் ரெயில் நிலையங்கள் இடையே 4-வது வழித்தடம் பணிகள் காரணமாக சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புறநகர் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன.

இன்று காலை 4 முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அந்த நேரத்தில் கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு இயங்கும் அனைத்து புறநகர் ரெயில்கள் இருமாா்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னை கடற்கரையில் இருந்து திருவள்ளூா் செல்லும் ரெயில்கள் ஆவடியில் இருந்தும், கும்மிடிப்பூண்டி செல்லும் ரெயில்கள் கொருக்குப் பேட்டையில் இருந்தும் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும். சென்னை கடற்கரையில் இருந்து ஆவடிக்கு இயங்கும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இன்று காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை பூங்காவிலிருந்து தாம்பரத்துக்கு இரு மார்க்கத்திலும் 20 முதல் 30 நிமிடங்கள் இடைவெளியில் 79 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.  பராமரிப்பு பணிகள் முடிந்த பின் இன்று மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Chennai , Suburban trains. Today, cancel,