திருப்பதி

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று திருப்பதி கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவ தளங்களில் இன்று சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருகின்றனர்.

இன்று அதிகாலை 4 மணிக்குப் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்களின் கோவிந்தா… ரங்கா… கோஷங்களுக்கிடையே சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நள்ளிரவு 1.40 மணிக்குச் சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்தனர்.