கோவை

ன்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது தென் தமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய கிழக்கு வங்க்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

எனவே தமிழகத்தின் ஓருசில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, நெல்லை, திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக கோவை மற்றும் திருப்பூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.