டெல்லி

மலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஆஜாரானார்

பிரபல தொழிலாதிபரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர். பிரியங்கா காந்தி எம் பி யின் கணவருமான ராபர்ட் வதேரா, அரியானா மாநிலம், குருகிராம் அருகில் உள்ள சிகோபூர் என்ற இடத்தில் 3.5 ஏக்கர் நிலத்தை ராபர்ட் வாதேரா விலைக்கு வாங்கி. அந்த நிலத்தை ரூ.58 கோடிக்கு டி.எல்.எப். நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டார்.

ராபர்ட் வதேரா தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு நிலத்தை விற்றதாகவும், டி.எல்.எப் நிறுவனத்திடமிருந்து சொத்துகளை வாங்க அதிக அளவில் சலுகை எதிர்பார்த்ததாகவும் 2011ம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருந்தார். ,மேலும் நிலம் வாங்கி விற்பனை செய்யப்பட்டதில் பணமோசடி நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

ஏற்கனவே கடந்த 8ம் தேதி அமலாக்கத்துறை ராபர்ட் வதேராவுக்கு ஒரு முறை சம்மன் அனுப்பி இருந்தது. அந்த சம்மனுக்கு ராபர்ட் வதேரா ஆஜராகவில்லை. ர்ன்பதால் தற்போது இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது.

இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜரான ராபர்ட் வாதேரா செய்தியாளர்களிடம்,

”இந்த நடவடிக்கை என்னையும் எனது மைத்துனரும் காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியையும் மவுனமாக்குவதை நோக்கமாகக் கொண்ட “அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின்” ஒரு பகுதி. ஆகும்

மத்திய அரசின் சதி திட்டம். என்னை பழிவாங்க அரசு இயந்திரத்தை ஏவி விடுகிறது. நான் எப்போதெல்லாம் மக்களுக்காக பேசுகிறேனோ, அப்போதெல்லாம் என் வாயை மூட இதுபோன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது”

என்று தெரிவித்துள்ளார்.