டெல்லி

ன்று மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனைநடத்தி உள்ளார்

இன்று டெல்லியில் உள்ள் காங்கிரஸ் தலைமையகத்தில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி ஆலோசனையில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் , மாநில காங்கிரஸ் தலைவர்கள், தமிழ்நாட்டிலிருந்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மாநில பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

நடப்பாண்டு இறுதிக்குள் ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற நடைபெற உள்ளது. பிறகு அடுத்த வருட தொடக்கத்தில் டெல்லியில் சட்டப்பேரவை நடைபெற உள்ளது

எனவே மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.