டெல்லி
இன்று மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், அது தொடர்பான மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் அறிவித்தபடி, புதிய வருமான வரி மசோதா 2025, நாடாளுமன்ற மக்களவையில் இன்று (தாக்கல் செய்யப்பட்டது.
மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், வரி செலுத்துவோருக்கு எளிதில் புரியும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மசோதாவில் நீளமான சொற்களுக்கு பதில் சிறிய சொற்கள் இடம்பெற்றுள்ளதாகவும், முந்தைய ஆண்டு, மதிப்பீட்டு ஆண்டு ஆகிய சொற்களுக்கு பதில், வரி ஆண்டு என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, புதிய வருமான வரி சட்டம் ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டு இந்த சட்டம் அடுத்த நிதியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு பெற்ற நிலையில் மக்களவை மார்ச் 10-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.