ஸ்ரீநகர்

ன்று கார்கில் போர் வெற்றி தினம் என்பதால் பிரதமர் மோடி அங்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார்.

கடந்த 1999-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. நம் இந்திய ராணுவ வீரர்கள் இதனை தீரத்துடன் எதிர் கொண்டு முறியடித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த போர் வெற்றி தினம் ஜூலை 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25 ஆம் ஆண்டு என்பதால் சிறப்பு நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் கார்கில் பகுதியில் உள்ள டிராஸ் பகுதியில் தொடங்கியது.

பிரதமர் மோடி இன்று இந்த விழாவில் பங்கேற்பதற்காக கார்கில் செல்கிறார். அவர் அங்கு போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறார். மேலும் கார்கில் பயணத்தின் ஒரு பகுதியாக, ஷிங்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

இந்த ஷிங்குன் லா சுரங்கப்பாதை திட்டமானது 4.1 கிமீ நீளமுள்ள இரட்டைக் குழாய் சுரங்கப்பாதையாக அமைக்கப்படுகிறது. சுமார் 15,800 அடி உயரத்தில்  மலைப்பகுதியில் அமைக்கப்படும் சுரங்கப் பணிகள் முடிந்துவிட்டால், இந்த சுரங்கப்பாதை உலகின் மிக உயரத்தில் கட்டப்பட்டது என்ற பெருமையை பெறும்.