கொல்கத்தா

ன்று கொல்கத்ஹா பெண் மருத்துவர் பலாத்கார கொலைக்கு நீதி கேட்டு இளநிலை மருத்துவர்கள் 12 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

கடந்த ஆகஸ்டு 9 ஆம் தேதி அதிகாலையில் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இதையொட்டி சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு காவல்துற விசாரித்த நிலையில், கொல்கத்தா உயரீதிமன்ற உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று சீல்டா நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த நிலையில் இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட இளநிலை மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்கும் சவுமோதீப் ராய்,

“2 நாட்களாக எங்களுடைய கல்லூரியை சேர்ந்தவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை இந்த உண்ணாவிரத போராட்டம் தொடரும்.  இன்று மாலை பேரணி ஒன்று நடைபெறும். வடக்கு வங்காள மருத்துவ கல்லூரியில், ஜூனியர் டாக்டர்கள் மற்றும் பிற கல்லூரிகளை சேர்ந்தவர்கள் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்

சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் உள்ள விவரங்கள் என்ன? என்று நாங்கள் பார்க்க வேண்டும். ஆனால், இந்த சம்பவத்திற்கான உள்நோக்கம் தெளிவாக தெரியும்வரை, எத்தனை நபர்கள் இதனுடன் முழுவதும் தொடர்பில் உள்ளனர் மற்றும் எவ்வளவு சான்றுகள் அழிக்கப்பட்டு உள்ளன போன்ற அனைத்தும் வெளிவர வேண்டும் என தொடர்ந்து நாங்கள் கூறி வருகிறோம். இவை எல்லாம் தெரிய வரும்வரை எங்களை திருப்திப்படுத்த முடியாது. எங்களுடைய போராட்டம் தொடரும் ”

என்று கூறியுள்ளார்.