ஜ்ஜார்

ன்று அரியானா மாநிலத்தில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்க்ம ஏற்பட்டுள்ளது.

அரியானாவின் ரோஹ்தக் பகுதியில் இன்று அதிகாலை 12.46 மணியளவில் ரிகடர் 3.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று மதியம் அரியானாவில் உள்ள ஜஜ்ஜார் பகுதியில் மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று மதியம் 12.34 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5சுமார் கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 28.64 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.75 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் லேசாக பதிவானதால் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டெல்லியிலும் உணரப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.