சென்னை

மிழகத்தில் இன்று 569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,56,246 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,073 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 54,964 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,76,38,302 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் ஒருவர் வெளிநாட்டில் இருந்தும் 4 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர்.  இதுவரை  8,56,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 4 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 12,525 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 510 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,39,648 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,073 பேர் சிகிச்சையில் உள்ளனர்.