சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதாவது மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில்  லேசான மழைக்கு வாய்ப்புள்ளது”

எனத் தெரிவித்துள்ளது.