புதுச்சேரி

ன்று புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விடுவதற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி இன்று  ஆட்டோ ஓட்டுநர்கள்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள்னர்.

அவர்கள் இ-பைக் திட்டங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும், கட்டிட தொழிலாளர்களுக்கு வழங்குவதுபோல் தீபாவளி உதவித்தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கவேண்டும், ஆட்டோக்களுக்கு விதிக்கப்படும் ஆன்லைன், ஸ்பாட் பைன் அபராத முறையை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்

இன்று புதுவை மாநில அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில்வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று புதுவையில் ஆட்டோக்கள் ஓடவில்லை. சட்டசபை நோக்கி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் ஊர்வலமம் நடத்த உள்ளனர்.