டெல்லி

ன்று காஷ்மீரில்  அனைத்துக்  கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அர்சு அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் பலியானார்கள்.இந்த சம்பவம்  நாட்டையே அதிர வைத்துள்ளது/.

எனவே இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து இருந்தன.

இதையொட்டிராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது

மேலும். இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோர் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் பேசி வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.