சென்னை
தமிழகத்தில் இன்று 13,990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 28,14,276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,35,266 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 5,86,62,798 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 13,990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளிநாட்டில் இருந்து 13 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 19 பேர் வந்துள்ளனர். இதுவரை 28,14,276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 36,866 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 2,547 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 27,14,643 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 62,767 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 6,190 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 5,98,844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று 4 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 8,680 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இன்று 1,127 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,55,321 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 30,843 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் செங்கல்பட்டு 1,696 உடன் இரண்டாம் இடத்திலும் திருவள்ளூர் 1,054 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 2,56,553 பேர் பாதிக்கப்பட்டு 2,526 பேர் உயிர் இழந்து 2,51,132 பேர் குணம் அடைந்து தற்போது 2,895 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,83,349 பேர் பாதிக்கப்பட்டு 2,555 பேர் உயிர் இழந்து 1,73,314 பேர் குணம் அடைந்து தற்போது 7,480 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் செங்கல்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது.
[youtube-feed feed=1]