சென்னை: “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் சரியாக செயல்பட்டு வருகிறது”  திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

கடந்த ஜூலை 5 ஆம் தேதி மாநில பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை விசாரிக்கும் நகர போலீஸார், ஏற்கனவே 23 பேர் கைது செய்யப்பட்டிருந்தாலும்,  முக்கிய குற்றவாளி திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார்.  இது பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலம் வழக்கு தொடர்பாக அடத்தடுத்த அனைத்து கட்சிகளைச்சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்னும் பலர் எங்கள் ரேடாரில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தள்ளனர்.  இந்த வழக்கில் விரைவில் மற்றொரு பெரிய திருப்புமுனை இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் எழுதியது சம்பந்தமாக கடலூரைச் சேர்ந்த தனியார்ப் பள்ளி தாளாளர் அருண்ராஜ் என்பவரைச் செம்பியம் காவல்துறை கைது செய்தது. இந்த நிலையில் முன்னாள் வழக்கறிஞர் சங்க தலைவரும், பாஜக பிரமுகரும், பல்வேறு வழக்குகளில் வாதாடிய பால் கனகராஜை நேரில் ஆஜராகச் சொல்லி காவல்துறை அவருக்குச் சம்மன் அனுப்பியது. இதனையடுத்து இன்று காலை புதுப்பேட்டை காவல் குடியிருப்பில் உள்ள விசாரணை அலுவலகத்தில் வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜரானார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு பார் கவுன்சில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் மற்றும் வரலாற்று தாளாளரும் தேடப்பட்டு வருகிறார். 2015 செப்டம்பரில் கிழக்கு கடற்கரை சாலையில் வக்கீல் ஈசா என்ற ஈஸ்வரன் கொலையில் முக்கிய சந்தேக நபரான இவர், அண்ணாசாலையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் வகையில் வரலாற்று தாள்கள் சி.டி.மணி மற்றும் காக்காதோப்பு பாலாஜி ஆகிய இருவரையும் கொலை செய்ய அவரது கும்பல் தோல்வியடைந்த முயற்சியில் ஈடுபட்டது. மார்ச் 2020 இல். இந்த கொலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து சிறையில் இருக்கும் மற்றொரு முக்கிய வரலாற்று தாளாளரின் தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதிய நகரக் காவல் ஆணையர் அருண், விசாரணையை நேரடியாகக் கண்காணித்து வருகிறார்.

இந்த நிலையில்,  இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ்நாடுஅரசையும், காவல்துறையயையும் கடுமையாக விமர்சனம் செய்தார். உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றும் விமர்சனம் செய்தார்.

அதைத்தொடர்ந்து நேற்று வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது. மேலும், இப்போராட்டத்தில் இயக்குநர் பா. இரஞ்சித், இயக்குநர் தீனா உள்ளிட்ட 1500 பேர் பங்கேற்றனர். போராட்டத்தின்போதும் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பா.ரஞ்சித்,  “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் சரியாக செயல்பட்டு வருகிறது என கூறினார். கடந்த சில நாட்களாக காவல்துறையை கடுமையாக விமர்சனம் செய்த ரஞ்சித், தற்போது காவல்துறைக்கு ஆதரவாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதும்  தமிழ்நாடு அரசுக்கு பா.ரஞ்சித் எழுப்பிய கேள்விகள் விவரம்:-

இயக்குனர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், : “கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்!

இதனையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், சமூக வலைத்தள ஊடகங்களில் வன்மத்தை பரப்பிக் கொண்டிருப்பவர்களிடம் சில கேள்விகள்:

1. சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?

2. படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்த கயவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே இதை செய்திருப்பதாக காவல் துறையினரும் அறிவித்திருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல் துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல் துறை வந்து விட்டதா? இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் காவல்துறையின் நிலைப்பாடென்ன? பல செய்திகளை உலவ அனுமதித்து இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்? ஊடகங்களும் இதுகுறித்து கேள்வி எழுப்ப மறுப்பது ஏன்?

3. சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

4. பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம். திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும்.

5. திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?

6. அண்ணனின் படுகொலையையொட்டி எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையை கையாளத் தெரியாமல், மாற்றுக் கதையை வலைத்தளங்களில் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் வலைத்தள சமூகநீதி காவலர்களும் சில ஊடகங்களும்!. ‘அவரே ஒரு ரவுடி’, ‘ஒரு ரவுடியை கொல்வது எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியும்’, ‘கட்டப்பஞ்சாயத்து செய்பவர்’, ‘பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்’ என ஆளாளுக்கு தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கொலை நடந்த நடுக்கம் குறைவதற்கு முன்பே இத்தகைய கருத்துருவாக்ககங்களை பேசுவதற்கு பின்னே இருப்பது யார்? என்ன?

7. ஆதிக்க வர்க்கத்தாரே! எங்களின் சுயமரியாதையின் பொருட்டு நாங்கள் கிளெர்ந்தெழுவதை ரவுடித்தனம் என்கிறீர்கள். வருவோருக்கெல்லாம் லட்சக்கணக்கான புத்தகங்களை அன்பளிப்பாய் கொடுத்தவர், தம்மமே மானுட சமூகத்தின் விடுதலையை தரும் என்று பாபாசாகேப் வழியில் பௌத்தத்தை முன்னெடுத்தவருக்கு எதிராய் இத்தகைய கதைகளை உருவாக்குவதின் மூலம் உங்களை நீங்களே திருப்திப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், எங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும், ஒடுக்குதலுக்கு எதிராக அண்ணன் ஆர்ம்ஸ்ட்ராங் போல கிளெர்ந்தெழுகிறவர்களால் நாங்கள் பெற்ற எழுச்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.

முடிவாக, சிறுவயது முதலே அண்ணனின் அன்பில் ஈர்க்கபட்டவன் நான். திரைத்துரையில் நான் வந்த பிறகு என் வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் எந்நாளும் அக்கறை கொண்டு என்னை பாதுகாப்பு வளையத்தில் வைத்திருந்தவர். பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் பாதையில் எவ்வித சமரசமுமின்றி தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அண்ணனை இழப்பது என்பது என் வாழ்வில் மிகப்பெரிய பின்னடைவாகவே நான் கருதுகிறேன். இதை சரி செய்ய அவரின் பேச்சுகளும் சிந்தனைகளுமே என்னை (எங்களை) வழிநடத்தும்.

ஜெய்பீம்!” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.