டெல்லி

மிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம் பிக்கள் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர்.

நேற்று கூடிய 18 ஆவது நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய அமைச்சர்களும், எம் பி க்களும் பதவி ஏற்றனர். இன்று மக்களவை கூடியதும் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 40 எம்.பிக்கள் அடுத்தடுத்து பதவியேற்றுக்கொண்டனர். அவர்கள் கையடக்க அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி தமிழில் பதவியேற்றுக்கொண்டனர்.

இன்று தமிழக எம்.பி.க்கள் பதவியேற்றுக்கொண்டபோது கருணாநிதி,ஸ்டாலின், உயதநிதி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டனர். குறிப்பாக கதிர் ஆனந்த், சசிகாந்த் செந்தில் உள்ளிட்ட எம்.பி.க்கள் பதவியேற்றபோது வருங்காலம் எங்கள் உதயநிதி…வாழ்க தமிழ்நாடு, ஸ்டாலின் வாழ்க என முழக்கமிட்டனர்.  தயாநிதி மாறம் பதவியேற்றதும் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்று. கோஷமிட்டார்.

மேலும் திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் தமிழில் பதவியேற்றுக் கொண்டு “தலித்துகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நிறுத்துக” எனக் கூறியதும் பாஜ்ச்க்ச் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  திருமாவளவன்  தமிழில் பதவியேற்ரு ஜனநாயகம் வாழ்க, அரசியல் சாசனம் வாழ்க என ஆங்கிலத்தில் கோஷமிட்டார்.