சென்னை

மிழக அரசு வாகனத்தில் இந்தியில் எழுதிய வட மாநிலத்தவர் தாக்கப்படவில்லை என அறிவித்துள்ளது.

மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் மும்மொழி கொள்கை விவகாரத்தில் இடையே வார்த்தை போர் நிலவி வருகிறது. மும்மொழி கொள்கை  தொடர்பான அதிருப்தி தலைநகர் டெல்லி வரை எதிரொலித்தது.

அண்மையில் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்ட வடமாநிலத்தை சேர்ந்த நபர் தனது மகனுடன் தமிழகத்துக்கு வந்தபோது, அவரது வாகனத்தில் ‘பாரத் மாதா கி ஜே’ என்று இந்தியில் எழுதி இருந்ததால் தாக்கப்பட்டதாக கூறி ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம்,

“வீடியோவில் இடம்பெற்ற நபர் தனக்கு நடந்ததாக கூறும் இந்த சம்பவம் திருப்பதியில் நிகழ்ந்ததாக தெரிவித்து அவரது யூடியூப் பக்கத்திலும் பதிவிட்டு இருக்கிறார். இந்த சம்பவம் நடந்த பிறகு தற்போது சென்னைக்கு வந்திருப்பதாக கூறுவதுடன் வீடியோ முடிவடைகிறது. இதை திரித்து தமிழகத்தில் அவர் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பி வருகின்றனர்”

என்று விளக்கம் அளித்துள்ளது.