சென்னை: மத்திய அரசின் DRIP திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முக்கியமான 5 அணைகளை புதுப்பிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், இதனால் நீர் சேமிப்பு அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் DRIP திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் 5 அணைகள் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்காக ணிகள் நடக்க உள்ளன. இதற்காக 510 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இதற்காக உலக வங்கி 70% நிதியை வழங்கும். தமிழ்நாடு அரசு 30% நிதியை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சாத்தனூர், கேளவரப்பள்ளி, பவானி சாகர், சோலையார் மற்றும் அப்பர் நிரார் ஆகிய அணைகள் புதுப்பிக்கப்படும். அணைகளில் ஏற்படும் நீர் கசிவுகளை சரி செய்யவும், ஷட்டர்களை மாற்றவும், பக்கவாட்டு சுவர்களை வலுப்படுத்தவும், நீர்ப்பிடிப்பு பகுதிகளை சீரமைக்கவும் இந்த திட்டம் உதவும். இதனால், வெள்ள அபாயமும் குறையும் என்றும், . இந்த அணைகளை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாகநீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது, DRIP Phase-II திட்டத்தின் கீழ் மேலும் ஐந்து அணைகளை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிதியின் மூலம் இந்த ஐந்து அணைகளை புதுப்பிக்க அரசு முடிவு செய்துள்ளது. பவானி சாகர் அணையின் நீரை கொண்டு செல்லும் கால்வாய்களில் உள்ள சேதமடைந்த பக்கவாட்டு சுவர்கள் சரி செய்யப்படும். மண் சுவர்களுக்கு பதிலாக கான்கிரீட் சுவர்கள் கட்டப்படும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி ஆழப்படுத்தப்படும். இதனால் நீர் சேமிப்பு திறன் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. தலைமை செயலாளர் என். முருகானந்தம் இந்த குழுவுக்கு தலைமை தாங்குகிறார். செப்டம்பர் 4-ம் தேதி நீர்வளத்துறை வெளியிட்ட அரசாணையின்படி, இந்த குழுவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இருப்பார்கள். அணை பாதுகாப்பு தலைமை பொறியாளர்களும் இருப்பார்கள். இவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய திட்டங்களை மேற்பார்வையிடுவார்கள்.
ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கெலவரப்பள்ளி அணையும் புதுப்பிக்கப்படும். பெங்களூரில் இருந்து வரும் கழிவுநீர் இந்த ஆற்றில் கலக்கிறது. இதனால் ஏற்படும் பிரச்சினையும் சரி செய்யப்படும். இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அரசுகள் கழிவுநீர் பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியும் பருவமழைக்கு முன்னதாக ஆழப்படுத்தப்படும்.
இந்த குழு ஐந்து அணைகளையும் ஆய்வு செய்யும். மேற்கொள்ள வேண்டிய பணிகளை மதிப்பிடும். ஒரு மாதத்திற்குள் பணிகள் தொடங்கும் என்று கோபாலகிருஷ்ணன் கூறினார். DRIP Phase-III க்கான பணிகளும் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். “DRIP-III க்கு உலக வங்கியிடம் இருந்து 66 கோடி ரூபாய் மட்டுமே நிதி உள்ளது. எனவே, மூன்றாம் கட்டத்தில், மாநில அரசு 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதிக அணைகளை புதுப்பிக்க உள்ளது,” என்று அவர் கூறினார்.