சென்னை: தமிழ்நாடு முழுவதும்  கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள சுமார் 2000 இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்.

கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 29-ம் தேதி வரை http://www.drbkpm.in இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உளள கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இன்று முதல் வருகிற 29-ந்தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அவற்றை பரிசீலித்து, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 5-ந்தேதி ஹால் டிக்கெட் வழங்கப்படும். செப்டம்பர் 12-ந்தேதி எழுத்து தேர்வு நடைபெற்று, அக்டோபர் 27-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். நவம்பர் 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நேர்காணல் நடத்தி, இறுதி முடிவுகளை நவம்பர் 15-ந்தேதி வெளியிடப்படுகிறது.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.