சென்னை
தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு அளிக்கும் இழப்பீட்டு தொகையை உயர்த்தி உள்ளது.

பால் உற்பத்தியாளர்களுக்கு பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நல நிதியத்தின் கீழ் இழப்பீடு மற்றும் இதர நிதி உதவிகள் வழங்கப்படுகிறது. இவை உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலவர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததையொட்டி. இதனை செயல்படுத்தும் விதமாக விதிகளை திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதாவது பால் உற்பத்தியாளர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டு இரண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு பெண் குழந்தைக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை 30 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதைத் தவிர ஈமச்சடங்கு உதவித் தொகை 5 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாகவும் விபத்தில் ஊனமுற்ற பால் உற்பத்தியாளர் ஓர் உறுப்பை இழந்தால் வழங்கப்படும் உதவித் தொகை 75 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாகவும், இரண்டு உறுப்பை இழந்தால் 1.75 லட்சத்தில் இருந்து 2.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உயர்வை செயல்படுத்த பால் ஊற்றும் உறுப்பினர்களிடம் இருந்த மாதத்திற்கு பெறப்படும் சந்தா ஒரு ரூபாய் இருந்து 10 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சங்கம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திடம் இருந்து மாதத்திற்கு பெறப்படும் சந்தா 50 பைசாவில் இருந்து ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
Milk Producers, TN Govt, Compensation, increased, பால் உற்பததியாளர்கள், தமிழக அரசு, இழப்பீடு, உயர்வு
[youtube-feed feed=1]