சென்னை

மிழக அரசு சுமார் 19000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்  என அறிவித்துள்ளது.

xr:d:DAFaJkgOSsI:2986,j:46276722947,t:23050207

வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கூட உள்ள தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக அரசின் பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்யப்ப உள்ள நிலையில் இதன் முன்னோட்டமாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், நேரு உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.  இன்று காலை 10.55 மணிக்கு தொடங்கி, நண்பகல் 12.05 மணிக்கு முடிந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், வேலூர், தூத்துக்குடி, திருச்சி, தொழிற்சாலைகள் அமைக்கும் முதலீட்டுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ரூ.7,375 கோடி மதிப்பு தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சுமார் 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாக தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகளாவிய திறன் மற்றும் லெதர் அல்லாத காலணி, உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.