சென்னை: தமிழகத்தில் இன்று 451 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

451 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, ஒட்டு மொத்தமாக பாதித்தோர் எண்ணிக்கை 8,46,026 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 149 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 470 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்று மட்டும் 7 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,29,388 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 4,206 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel