சென்னை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று பதவியேற்ற ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று ஜம்மு-காஷ்மீர் யூனிய்ன் பிரதேசத்தின் புதிய முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா இன்று பதவியேற்றுக் கொண்டார்.  இதையொட்டி உமர் அப்துல்லாவுக்கு தமிழக முதல்வ்ர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில்,

ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள உமர் அப்துல்லாவுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையின் காரணமாகக் கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான கனிமொழியை என் சார்பாகவும் கழகத்தின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன்.

இந்தியத் துணைக் கண்டத்தில் தென் முனையில் உள்ள தமிழ்நாடும் வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரமும் உரக்கக் குரலெழுப்பும் மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்! வெற்றி காண்போம்!.”

என்று தெரிவித்துள்ளாஎ.