டெல்லி: திருப்பதி லட்டு விவகாரத்தில், வெளியான செய்திகள் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள ராகுல்காந்தி, அதிகாரிகள் நமது மத இடங்களின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

திருப்பதியில் வழங்கப்பட்ட்டு வரும் லட்சு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. லட்டு பிரசாதம் தயாரிப்பில் ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யைப் பயப்படுத்தியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சம்பம்  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தனது மனவருத்தத்தை  காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.  இது தொடர்பான  அவர் தனது சமூக வலைதள பக்கமான  எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் பிரசாதம் தீட்டப்பட்டதாக வெளியான செய்திகள் கவலையளிக்கின்றன.

இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டிற்குரிய தெய்வம் பாலாஜி.

இந்த பிரச்சினை ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும் மற்றும் முழுமையாக கவனிக்கப்பட வேண்டும்.

இந்தியா முழுவதும் உள்ள அதிகாரிகள் நமது மத இடங்களின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மண்டையில் மூளைக்கு பதில் மலம்தானே இருக்கு! லட்டு விவகாரத்தில் மேலும் சூடேற்றிய நடிகை கஸ்தூரி…