டெல்லி

ரும் 25 ஆம் தேதி வரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலில் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் 21ம் தேதி இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை இரவு அமலாக்கத்துறை கைது செய்து கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவல் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கினாலும் சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார்.

சிபிஐ வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றோடு நிறைவடைந்த நிலையில், அவர் இன்று டெல்லி நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, அவரின் நீதிமன்ற காவலை வரும் 25ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.