காமாட்சி அம்பாள் திருக்கோயில், அல்லிநகரம்,  தேனி மாவட்டம்

தல சிறப்பு :

கருவறையில், மூலவருக்கு முன்னே உள்ள மகாமேறா மகத்துவம் வாய்ந்து அம்பாளுக்கு அர்ச்சனை நடைபெறும்போது மகாமேருவுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

பொது தகவல் :

கல்வி கேள்விகளில் ஞானத்துடன் திகழவும் விரும்பிய வேலை கிடைக்கவும், பணியில் பதவி உயர்வு கிடைக்கவும், கல்யாண வரம் வேண்டியும், பிள்ளை வரம் கேட்டும் பக்தர்கள் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன் :

வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள அம்மனுக்கு தீ சட்டி எடுத்தும். பால்அபிஷேகம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

தலபெருமை :

காஞ்சி காமாட்சி அம்பாளின் சக்தி பெற்ற குங்குமத்தைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து, அதன் மேல் அமைக்கப்பட்ட பத்ம பீடத்தில் அமர்ந்தபடி அழகு ததும்பக் காட்சி தருகிறாள், காமாட்சி அம்பாள் அம்மனின் பிரசாதமாகத் தரும் குங்குமத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று, பூஜையறையில் வைத்து, தினமும் நெற்றியில் இட்டுக் கொண்டால், வீட்டில் சுபிட்சம் நிலவும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இங்கு நவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. முதல்நாளில், சிறுமியைப் போல அம்பிகைக்கு அலங்காரம் செய்து வழிபடுகின்றனர் அடுத்தடுத்து அம்பிகையின் வளர்ச்சியைக் குறிக்கும் வகையில் அலங்காரம் அமைந்திருக்கும் என்பது சிறப்பு.

தல வரலாறு :

இங்கே நடைபெற்ற கும்பாபிஷேக வைபவத்தின்போது, காஞ்சி காமாட்சி அம்பாள் உடுத்திக் கொண்ட புடவையைப் பூஜித்து, இந்தக் கோயிலின் அம்மனுக்குச் சார்த்தி, சிறப்பு பூஜை செய்துள்ளனர் எனவே, காஞ்சி காமாட்சியே இங்கு உறைந்து அருள்பாலிக்கிறாள் எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.

திருவிழா :

நவராத்திரி விழா, பங்குனி மாத திருவிழா.

சிறப்பம்சம் :

கருவறையில், மூலவருக்கு முன்னே உள்ள மகாமேரு மகத்துவம் வாய்ந்து, அம்பாளுக்கு அர்ச்சனை நடைபெறும்போது மகாமேருவுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.