சென்னை
இம்மாதம் தமிழகத்துக்கு மத்திய அரசு சுமார் 75 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்க உள்ளது.

நாட்டில் இரண்டாம் அலை கொரோனா பரவல் சிறிது சிறிதாகக் குறைந்த போதிலும் மூன்றாம் அலை கொரோனா விரைவில் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதையொட்டி நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து மத்திய அரசு நேரடியாகக் கொள்முதல் செய்கிறது. அதை மாநிலங்களுக்கு மத்திய அரசு தனது தொகுப்பில் இருந்து ஒதுக்கீடு செய்து வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் இருந்து தமிழகத்துக்கு இந்த மாதம் சுமார் 75 ;லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன. இந்த தகவலைத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel