மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாது குறித்து, சிஐஎஸ்எஃப், தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர்நீதி மன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணை வரும்12ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றக் கிளையில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் தொடங்கியது. இன்றைய விசாரணைக்கு, அப்போது மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் நேரில் ஆஜராகவில்லை என மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஆஜரான அரசு வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சில முக்கிய உத்தரவினை பிறப்பித்தார். அப்போது, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக 3 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படவில்லை என கூறினார்.
ஒரே வழக்கில் மூன்று முறை உத்தரவுகள் பிறப்பித்தும் அதனை அமல்படுத்தாதது குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், திருப்பரங்குன்றம் சென்று அங்குள்ள நிலவரம் குறித்து சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கில் தொடர்புடைய மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் இரு நீதிபதிகள் அமர்விலும், தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்து தமிழக அரசு தரப்பிடம் நீதிபதி சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இந்த அவமதிப்பு வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தது.
இதையடுத்துஅரசு தரப்பில், வரும் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. . இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு 12-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும், விரும்புவர்கள் மேல்முறையீட்டு மனுக்களைஇன்று மாலைக்குள் தாக்கல் செய்யலாம் , அதன் பிறகு புதிதாக வரும் மனுக்கள் ஏற்கப்படாது என்று இருநீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.