சென்னை: முந்தைய திமுக அரசால் பல்வேறு வழக்குகள் போடப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு ரத்து செய்த நிலையில், சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுக்கப்பட்டார். இதையடுத்து, அவர் முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.

பிரபல யூடியூபரும், சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரியும், சவுக்கு சங்கர், கடந்த திமுக ஆட்சியின்போது, ஆட்சியாளர்கள் குறித்து பல்வேறு தகவல்களை தனது ஊடகத்தில் வெளியிட்டு வந்தார். மேலும் முதல்வர ஸ்டாலின் குடும்பம் குறித்தும், கட்சியினரின் ஊழல்கள் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியிட்டார். இதனால், அவரை ஒடுக்க, காவல்துறை மற்றும் கட்சியினர் கொண்டு பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டு, அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் தொடர்ந்தன. மேலும் அவர்மீது சென்னை மாநகராக காவல்ஆணையராக இருந்த அருண் உத்தரவின்பேரில் போடப்பட்ட குண்டர் சட்டமும் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும், அவரை சிறையில் வைத்து கொடுமை படுத்துவதில் தீவிரமாக இருந்த திமுக அரசு, கடந்த ஏப்.9-ம் தேதி அவரை மீண்டும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது.
இந்த நிலையில், புதிய அரசு அமைந்துள்ள நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு கடந்த புதன்கிழமை (20ந்தேதி) ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, சவுக்கு சங்கர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
சிறையில் இருநது வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுகவை மக்களே தூக்கி எறிந்து விட்டனர். கொளத்தூரில் மு.க.ஸ்டாலினை தோல்வியுற செய்ததன் மூலம், மக்கள் அற்புதமான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
வழக்கமாக ஆலோசனை வாரியத்துக்கு சென்று ஆஜரான பிறகு, குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்தால், அந்த உத்தரவு சிறைக்கு வந்து சேர 10 நாட்களுக்கு மேல் ஆகும். என் விவகாரத்தில் கடந்த திங்கட்கிழமை (மே 18ந்தேதி) ஆலோசனை வாரியத்துக்கு முன்பு ஆஜரானேன். தொடர்ந்து புதன்கிழமை (மே 20ந்தேதி) தமிழக அரசு குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து, அதற்கான அரசாணையை சிறைக்கு அனுப்பியது. உடனே நான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன்.
முதல்வர் விஜய்யே இவ்விவகாரத்தில் தலையிட்டதால் இது சாத்தியமானது. இதற்காக முதல்வர் விஜய்க்கும், நீதிமன்றங்களுக்கும் நன்றி.
இவ்வாறு கூறினார்.
[youtube-feed feed=1]