கூடங்குளம்

கூடங்குளத்தில் முதல் அணு உலையில் தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டுளதால் 1000 மெகவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. அங்கு 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திடீரென நேற்று அதிகாலை முதலாவது அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு,  இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.  விஞ்ஞானிகள் முதலாவது அணு உலையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

அணுமின் நிலைய அதிகாரிகள் இன்னும் ஓரிரு நாட்களில் தொழில்நுட்பக்கோளாறு சரி செய்யப்பட்டு முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று தெரிவித்தது. இரண்டாவது அணு உலையின் மூலம் மட்டும் தற்போது 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.