சென்னை:  ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு எதிராக அங்கு பணியாற்றிய பெண்ஊழியர்கள் நடத்திய போராட்டம் காரணமாக,  சில பரிந்துரைகளைகளை தமிழகஅரசு, அந்த தொழிற்சாலைக்கு வழங்கியுள்ளது.

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் பெண் ஊழியர்களுக்கான உணவு பாதிப்பு காரணமாக, 150க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, தொழிற்சாலை ஊழியர்கள் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். இது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஃபாக்ஸ்கான் பணி நிலைமையை மேம்படுத்த தமிழக அரசு சில நடவடிக்கைகளை அந்நிறுவனத்துக்கு  பரிந்துரைத்துள்ளது.