கோவை: கோவையில் கூட்டு பாலியலால் பாதிக்கப்பட்ட மாணவியை சந்தித்தார் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி,குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையின்போது,  தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி அதுகுறித்து விசாரிக்க முன்வராத நிலையில், தேசிய மகளிர் ஆணையம் வந்த விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்தது. இந்த நிலையில்,, தற்போது கோவை பாலியல் விவகாரத்தில் திடீரென வந்து, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசியிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் தனியார் கல்லூரி மாணவி நள்ளிரவு நேரததில்,  அவரது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த மூன்று பேர் அவர்களை தாக்கி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் பரப்பு ஏற்படுத்தி உள்ளது. அந்த கல்லூரி மாணவியும் அவரது ஆண் நண்பரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி கோவை அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட இருவரையும் சந்தித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

பாதிக்கப்பட்ட மாணவியை சந்தித்து என்ன தேவை என்பதை எல்லாம் கேட்டு அறிந்து கொண்டேன் என்றார். தற்பொழுது அவருக்கு பாதுகாப்பும் மனநல ஆலோசனையும் தேவைப்படுகிறது அதையெல்லாம் ஏற்கனவே தந்து வருகிறார்கள் என்று கூறினார்.  அந்தப் பெண்ணிடம் நீண்ட நேரம் பேசி விட்டு வந்தேன். காவல்துறை சம்பந்தப்பட்ட அந்த மூன்று பேரையும் பிடித்துள்ளார்கள் தற்போது பாதிக்கப்பட்ட இளைஞரை பார்க்க வந்துள்ளேன்.

பாதிக்கப்பட்ட பெண்ணை பற்றி நான் எந்த விஷயமும் கூற மாட்டேன். இப்போதைக்கு அந்த பெண்ணுக்கு தேவை மருத்துவம் பாதுகாப்பு மனநல ஆலோசனை தான் அதற்காக தான் நான் வந்துள்ளேன். பாதிக்கப்பட்ட ஒருவரின் பிரச்சனையை நாம் திரும்பத் திரும்ப கூற முடியாது.  அந்தப் பெண் அதிர்ச்சியில் தான் இருக்கிறார் அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு விதமாக தான் உள்ளது. கடுமையான தண்டனை வழங்கப்படும். அதில் மாற்றுக்கருத்தே கிடையாது. இது ஒரு கொடூர செயல் என்று தான் நான் கருதுவேன். இப்படிப்பட்ட ஆட்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று கேட்கும் பொழுது அதிர்ச்சி அளிக்கிறது.

அந்தப் பெண்ணிடம் என்ன நடந்தது என்று முழுமையாக விசாரித்து உள்ளேன் அறிக்கையை தயார் செய்து வைத்துள்ளேன். அதை தவிர வேறு எதுவும் கூற முடியாது கடுமையான தண்டனை வழங்கப்படும், முதல்வரும் ஒரு மாத காலத்திற்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். தற்போது எல்லாம் இது போன்ற செயல்களுக்கு தண்டனை உடனடியாக வழங்கப்படுகிறது அதேபோன்று கடுமையான தண்டனை இந்த வழக்கிற்கும் வழங்கப்படும்.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கும் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். தற்போது அதிக விழிப்புணர்வு உள்ளதால் பெண்கள் தைரியமாக முன்வந்து அந்த குற்றச்செயல்கள் பற்றி கூறுகிறார்கள், ஆணையம் சார்பாகவும் முடிந்த அளவு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். முன்பெல்லாம் பெண்கள் இது போன்ற விஷயங்களை சொல்வதற்கு பயப்படுவார்கள் தற்போது பெண்கள் தைரியமாக வந்து அவர்களது பிரச்சனைகளை கூறுகிறார்கள் அதற்கான தீர்வுகளும் வருகிறது.

தற்போது அனைத்து இடங்களிலும் உதவி எண் இருப்பதினாலும் தங்கக்கூடிய இடங்கள் வசதிகள் என  பல்வேறு விஷயங்கள் இருப்பதாலும் தீர்வுகள் இருப்பதாலும் தைரியமாக முன்வந்து பெண்கள் அவர்களது பிரச்சனைகளை கூறுகிறார்கள். மகளிர் ஆணையத்தில் முன்பெல்லாம் மனுக்கள் வராது. ஆனால் தற்போது இந்த இடத்திற்கு சென்றால் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. அதனால் தைரியமாக முன் வருகிறார்கள். அதிகமான பெண்கள் ஆணையத்திற்கு வருகிறார்கள். அவர்களது பிரச்சனை தீர்த்து வைக்கப்படுகிறது.

ஆணையத்திற்கு இது போன்ற மனுக்கள் மட்டும் கிடையாது குடும்ப வன்கொடுமை, வரதட்சணை கொடுமை பாலியல் சீண்டல் போன்ற அனைத்து விதமான மனுக்களும் வருகிறது. இந்த விழிப்புணர்வு 2022ஆம் ஆண்டு இருந்ததை விட 30,40,50 சதவிகிதம் கூட அதிகரித்துள்ளது. கடும் தண்டனைகள் இருந்தால் குற்றங்கள் குறையும். எனக்கு தெரிந்து இந்த வழக்கெல்லாம் பேசப்படக்கூடாது ஏனென்றால் ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணை பற்றி திரும்பத் திரும்ப பேசுவதால் கஷ்டப்படுகிறார்கள்.

அந்தப் பெண்களைப் பற்றி அதிகமாக பேசினால் அவர்களது வாழ்க்கையும் பாதிக்கப்படும் தற்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் நிச்சயமாக நீதி தன் கடமையை செய்யும். மகளிர் ஆணையத்துடன் காவல்துறை ஒத்துழைப்பும் மிக நன்றாக உள்ளது.

அந்தப் பெண் அதிர்ச்சியில் தான் இருக்கிறார் அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு விதமாக தான் உள்ளது. கடுமையான தண்டனை வழங்கப்படும். அதில் மாற்றுக்கருத்தே கிடையாது. கோவை தனியார் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என மாநில மகளிர் ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜாய் கிரிசிடில்டா வழக்கு விசாரணை காவல்துறை கமிஷனருக்கு டைரக்ஷன் பாஸ் செய்துவிட்டேன் அதற்கு தகுந்தாற்போல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.