சென்னை: தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஜூன் 3 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்குவதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு ஜூன் 3-ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு கால கால்நடை மருத்துவம் உள்பட பல்வேறு படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, கால்நடை மருத்துவம்  மட ற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி – ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டு உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பிடெக் படிப்புகள் உள்ளன. பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2024 – 25-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் ஜூன் 3-ஆம் தேதி காலை 10 மணி முதல் 21-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

அயல்நாடு வாழ் இந்தியா், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோா் மற்றும் அயல்நாட்டினா் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களையும் இணையதளத்தில் பாா்த்து அறிந்து கொள்ளலாம்.

இந்த படிப்புகளுக்கு பிளஸ் – 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 53 இடங்கள்: 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பில் 45 இடங்கள், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.