சென்னை: சட்டசபை கூட்டத்தின் 3வது நாள் தொடங்கியுள்ள நிலையில், கிட்னிகள் ஜாக்கிரதை என்று சட்டையில் ஸ்டிக்கர் அணிந்து அதிமுக எம்எல்ஏ-க்கள் வந்திருக்கின்றனர். அதுபோல, பாமக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய அமர்வு அதகளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இன்றைய நாளில் கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

பேரவையில் இன்று  7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தில் திமுகவினரின் இரண்டு மருத்துவமனைகள் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், அதன்மீது நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் கிட்னி ஜாக்கிதரை என்ற பேட்ஜ் அணிந்தும்,  பாமக சட்டமன்ற குழுத் தலைவர் மற்றும் கொறடாவை மாற்ற வலியுறுத்திய கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுக்கும் நிலையில், அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து இன்று சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.

முன்னதாக,  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய விசைத்தறி தொழிலாளர்களை குறித்து கிட்னி திருட்டு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசைத்தறி தொழிலாளர்களின் ஏழ்மையை பயன்படுத்தி கிட்னியை பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதுதொடர்பாக அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தன.  இதையடுத்து கிட்னி திருட்டு விவகாரத்தை விசாரிக்க உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தலையிட முடியாது என்றும், சிறப்பு குழு விசாரணைக்கு தடையில்லை என்றும் உத்தரவிட்டது.  ஆனால் இதுவரை சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கிறது.

கரூர் விவகாரத்தில் தமிழக அரசு காட்டிய வேகம், கிட்னி திருட்டு விவகாரத்தில் காட்டாதது ஏன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி  கேள்வி எழுப்பி உள்ளார்.  நேற்றைய அமர்வில் கரூர் சம்பவம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து, அதிமுகவினர் சட்டசபையில் தர்ணா செய்யும் அளவிற்கு சூழல் சென்றது. இதன்பின் வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இந்த நிலையில் சட்டசபைக் கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் 3வது நாள் சட்டசபைக் கூட்டத்திற்கு அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் “கிட்னிகள் ஜாக்கிரதை” என்ற அடைமொழியுடன் கூடிய ஸ்டிக்கரை அணிந்து வந்துள்ளனர். இதனால் இன்று கிட்னி திருட்டு விவகாரத்தை அதிமுக திட்டமிட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.

‘அதுபோல,  பாமக எம்எல்ஏக்கள் 3 பேர் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். நேற்று இவர்கள் பாமக சட்டமன்ற குழு தலைவர் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய நிலையில், இன்று அவையில் அதுகுறித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறத.

பாமக நிறு​வனர் ராம​தாஸ், தலை​வர் அன்​புமணி இடையே உச்​சகட்ட மோதல் போக்கு நிலவி வரு​கிறது. இந்​நிலை​யில், பாமக சட்டப்பேரவை தலைவர் ஜி.கே.மணி, பாமக கொறடா அருள் ஆகியோரின் பதவியை பறிக்​க வேண்டும் என பாமக ஆதரவு எம்.எல்.ஏக்கள் கோரி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சட்​டப்​பேரவை வளாகத்​தில் பாமக எம்​எல்​ஏக்​கள் 3 பேர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இன்று பேரவை நிகழ்ச்சியில் பங்​கேற்க வந்த அன்​புமணி தரப்பு பாமக எம்​எல்​ஏக்​கள் வெங்​கடேஸ்​வரன், சிவகு​மார், சதாசிவம் ஆகியோர்  இன்று கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். மூவரும் கருப்புச் சட்டை அணிந்தபடி ஒன்றாக சட்டசபைக்கு வருகை தந்தனர். “

 சட்டப்​பேரவை பாமக குழு தலை​வர் பதவி​யில் இருந்து ஜி.கே.மணியை நீக்க வேண்​டும். எம்​எல்ஏ அருளின் கொறடா பதவியை பறிக்க வேண்​டும். தருமபுரி எம்​எல்ஏ வெங்கடேஸ்வரனை​பேரவை பாமக குழு தலை​வ​ராகவும், மயிலம் எம்​எல்ஏ சிவகு​மாரை கொறடா​வாக​வும் நியமிக்க வேண்டும் கோஷமிட்​டனர். இது தொடர்​பாக ஏற்​கெனவே பேரவை தலை​வரிடம் கடிதம் கொடுத்​தும், எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.  இந்த நிலையில், அவர்களும் அவையில் பேச முயற்சி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.