சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ – மாணவியருக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கான, 2025 – 26ம் கல்வியாண்டுக்கான அரையாண்டு தேர்வு, டிசம்பர் 15ம் தேதி துவங்குகிறது.

துவக்கப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ – மாணவியருக்கு, இரண்டாம் பருவத் தேர்வு, டிச., 15 முதல் 23 வரை நடக்கிறது.

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரைக்கான தேர்வும், அதே நாட்களில் நடக்கிறது. இந்த தேர்வுகள், காலை, மாலை என, இரு வேளைகளில் நடைபெற உள்ளன.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு, டிச., 10ம் தேதி துவங்கி, 23ல் முடிகிறது. அதன்பின், அரையாண்டு விடுமுறை துவங்கும். 2026 ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதாவது, மாநிலப் பாடத்திட்டத்தில் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டு முறையில் தேர்வு நடத்தப்படும். இவர்களுக்கு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 2 மணி நேரம் பாட வாரியாகத் தேர்வு நடைபெறும்”

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு காலை 9.45 மணி முதல் மதியம் 1 மணி வரையில் நடைபெறுகிறது.

இவர்களுக்கு பொதுத்தேர்வினை போல் காலை 9.45 மணி முதல் 9.55 மணி வரையில் கேள்வித்தாள் கொடுத்து படிப்பதற்கும், 9.55 மணி முதல் 10 மணி வரையில் மாணவர்களின் விபரங்களை பதிவு செய்யவும், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் தேர்வு நடைபெறுகிறது.

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு மதியம் 1.45 மணி முதல் மதியம் 5 மணி வரையில் நடைபெறுகிறது. இவர்களுக்கு மதியம் 1.45 மணி முதல் 1.55 மணி வரை கேள்வித்தாள் கொடுத்து படிப்பதற்கும், 1.55 மணி முதல் 2 மணி வரை மாணவர்கள் விபரங்களை பதிவு செய்யவும், மதியம் 2 மணி முதல் மதியம் 5 மணி வரையில் தேர்வு நடைபெறுகிறது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு காலை 9.45 மணி முதல் மதியம் 1 மணி வரையில் நடைபெறுகிறது. இவர்களுக்கு பொதுத்தேர்வினை போல் காலை 9.45 மணி முதல் 9.55 மணி வரையில் கேள்வித்தாள் கொடுத்து படிப்பதற்கும், 9.55 மணி முதல் 10 மணி வரையில் மாணவர்களின் விபரங்களை பதிவு செய்யவும், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் தேர்வு நடைபெறுகிறது.