சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ. 4.50 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வங்கக்கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர், அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக உள்ளது. இதுதொடர்பான மீனவர்கள் பல முறை போராட்டம் நடத்தியும், இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்க முடியாத நிலை தொடங்கிறது.

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு 14 பேர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு  அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக  கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கும் தலா ரூ. 4.50 லட்சம் இலங்கைப் பணம் அபராதம் செலுத்துமாறு இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதம் செலுத்தத் தவறினால், ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டது.

கடந்த இரு நாட்களுக்க முன்பு ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து 90-க்கும் மேற்பட்ட விசைப் பகுகுகளில், 1,500-க்கும் அதிகமான மீனவா்கள்  கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். இவா்கள் கச்சத்தீவு-தலைமன்னார் வடக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் ஒரு விசைப் படகில் இருந்த 14 மீனவா்களைக் கைது செய்து, மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா்.  கைதான பாம்பன் மீனவர்கள் 14 பேரும் சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, 14 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.