தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) செயல்படுத்திட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்படி, குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் கடைசி சம்பளத்தில் 40 முதல் 50 சதவீதம் வரை ஓய்வூதியமாக கிடைக்கும் என அறிவிப்பு.

அரசு ஊழியராக 10 ஆண்டுகள் பணியாற்றினாலே ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிப்பு

30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்கப்படும்

பணிக்காலத்தில் இறக்க நேரிட்டால் 25 லட்சத்துக்கும் மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும் எனவும் அறிவிப்பு

அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பங்களிப்பு தொடரும் அதற்கு அரசு வழங்கும் பங்களிப்பும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு அலுவலர்களுக்கு இணையாக ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப் படி (DA) உயர்த்தப்படும் என்றும் அறிவிப்பு.

[youtube-feed feed=1]