இலங்கை அதிபர் அநுரா குமார திசாநாயகா மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்துகிறார்.

இந்த நிலையில் இலங்கை சிறையிலிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிப்பது பற்றி இலங்கை அதிபரிடம் பேசுங்கள் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்தும் அவர்கள் சிறைபிடிக்கப்படுவது குறித்தும் இலங்கை அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel