காபூல்:  தாலிபான்கள் ஆட்சி செய்து வரும், ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணிகளில் பணியாற்றும் தாடி வளர்க்காத 281 பேரை அந்நாட்டு அரசு பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், பெண்கள் பொது வெளியில் இனிமேல் சத்தமாக பாடுவதற்கும், பேசுவதற்கும் தடை விதித்து புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

மக்கள் விரோத ஆட்சி செய்து தாலிபான்கள், ஆப்கானிஸ்தானில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இஸ்லாமிய   மரபு என கூறி மூட பழக்கவழக்கங்களை  அமல்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியில் மக்கள் வாழ்க்கை நரகமாகியுள்ளது. பெண்கள் மீது பல்வேறு விதமான அபத்தமான கட்டுப்பாடுகளை விதித்து வீடுகளுக்குள் அடைத்து வைத்துள்ளனர். தற்போது ஆண்கள் மீதும் அட்டூழியங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொதுவெளியில் சத்தமாக பேசுவதற்கும் பாடுவதற்கும் தடை விதித்ததுடன், பெண்கள் கட்டாயம் தலை முதல் கால் வரை மறைத்து ஹிஜாப் உடை அணி வேண்டும் என்றும்  சட்டத்தை இயக்கி கொடுமைப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், அரசு பணிகளில் பணியாற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக தாடி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. தாடி வளர்க்காதவர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அதன்படி, சமீபத்தில்  தாடி வளர்க்காததால் 280க்கும் மேற்பட்டவர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கடந்த ஆண்டு 13,000க்கும் மேற்பட்டோர் ஒழுக்கக்கேடான செயல்களுக்காக கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இதேபோல கடந்த ஆண்டு மட்டும் 21,328 இசைக்கருவிகளை அழித்ததாக அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். சந்தைகளில் ஒழுக்கக்கேடான படங்களை விற்பனை செய்வதைத் தடுக்க ஆயிரக்கணக்கான கணினி ஆபரேட்டர்களைத் தடை செய்துவிட்டாகவும் முக்லிஸ் தெரிவித்தார்.

பெண்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக 200க்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 2,600க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தடுத்து நிறுத்தியதாகவும் அறநெறி அமைச்சகத்தின் திட்டமிடல் மற்றும் கொள்கை இயக்குநரான மொஹிபுல்லா முக்லிஸ் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த  2021இம் ஆண்டு ஆப்கானிஸ்தானில்   தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, காபூலில் உள்ள மகளிர் அமைச்சக வளாகம் அறநெறி அமைச்சகமாக மாற்றப்பட்டது. அதற்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், அதை பொருட்படுத்தாத தாலிபன் அரசு ஐ.நா.வில் பணியாற்றும் ஆப்கன் பெண் அதிகாரிகள் இஸ்லாமிய உடை அணிய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த அறநெறி அமைச்சகம் பெண்கள் அணியும் உடை இஸ்லாமிய முறையில் உள்ளதா எனக் கண்காணிக்கிறது. பெண்கள் ஆண் பாதுகாவலர்கள் இல்லாமல் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கும் தடை விதித்துள்ளது. பெண்கள் ஹிஜாப் (இஸ்லாமிய உடை) அணிவதைக் கட்டாயமாக்கி இருக்கிறது. பெண்கள் தங்கள் முகத்தை மறைக்க வேண்டும் அல்லது முழு உடலையும் மறைக்கும் பர்தா அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.