கும்பகோணம்
நகைச்சுவை நடிகர் எஸ் வி சேகர் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் தோற்கும் எனக் கூறி உள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் எஸ்வி சேகர் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம்,
“தமிழகத்தில் பாஜகவுடன் எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும், அந்த கூட்டணி மண்ணைக் கவ்வும். அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலிலும் திமுக மிக அதிக இடங்களில் வெற்றி பெறும்; ஆட்சி அமைக்கும்.
நாடாளுமன்ற மறுசீரமைப்பின் போது வட மாநிலங்களுக்கு எந்த விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ, அதே விகிதாச்சாரப்படி தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும் தொகுதிகள் கிடைக்க வேண்டும்.
திமுக தலைமை கேட்டுக் கொண்டால் திமுகவிற்காக பிரச்சாரம் செய்வேன். ஆனால் எந்த அரசியல் கட்சியிலும் இனி நான் சேரப் போவதில்லை.
கர்நாடக மாநிலத்தில் அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக இருந்தபோது, அவரை பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு முன்னதாக இவர் முந்திக்கொண்டு பதவியை ராஜினாமா செய்தார்”
எனத் தெரிவித்துள்ளார்.