சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் வெளியாகும் முதல் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் ‘அருவா’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் சூர்யா.
கொரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டப்படி படப்பிடிப்பு தொடங்க முடியவில்லை. இதற்கிடையே, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார் சூர்யா. தாணு தயாரிக்கவுள்ளார்.
முதலில் வெற்றிமாறன் படத்தை முழுமையாக முடித்துவிட்டு, ஹரி படத்துக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார் சூர்யா.

[youtube-feed feed=1]